நாள் பார்ப்பது எப்படி?
திங்கள் : சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய் : உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்புதன் : அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்வியாழன் : கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதிவெள்ளி : பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்சனி : ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதிஞாயிறு : பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதிஇப்படி நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கிழமைகளுக்கு அமையும் பட்சத்தில், அந்த நாள் திருமணத்துக்கு ஏற்றதல்ல.திதி எப்படி பார்க்கணும்?திங்கள் : சஷ்டி, செவ்வாய் : சப்தமி, புதன் : துவிதியை வியாழன் : அஷ்டமி, வெள்ளி : நவமி, சனி : சப்தமி, ஞாயிறு : சதுர்த்தசி இவ்வாறான காம்பினேஷனில் திதி அமைந்தால், சுபகாரியத்துக்கு அந்த நாளை கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடலாம். நற்காரியங்கள் செய்ய இந்த கிழமையில், இந்த திதி வந்தால் வேலைக்கு ஆகாது. மீறி செய்தாலும் பலன்கள் இருக்காது.வளர்பிறையில் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவற்றுக்கும், தேய்பிறையில் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி ஆகியவற்றுக்கும் இரு கண்கள் உண்டு. இந்த திதிகளில் சுபகாரியம் மேற்கொள்ளலாம். சில திதிகளுக்கு ஒரு கண் மட்டுமே. முழுமையான பலன் கிடைக்காது. பொதுவாக இரு பிறைகளிலும் அஷ்டமி, நவமி தேதிகளை தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் கூடவே கூடாது.ராகு கால பேஜார்!நிழல் கிரகங்கள் என்று ராகு, கேதுவை சொல்கிறார்கள். சர்ப்ப கிரகமான ராகு, ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்தை முழுங்கிக் கொள்கிறது. ராகு காலத்தில் புதிய முயற்சி எதையுமே துவக்கக்கூடாது என்பது நம் நம்பிக்கை.திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை.செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை.புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை.வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை.சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை.இந்த நேரங்கள்தான் ராகு விழுங்குபவை.எமகண்டம் உஷார்!ராகுகாலத்தை தவிர்ப்பதை போன்றே எமகண்டத்தையும் தவிர்க்க வேண்டும். முந்தையதைவிட இது கொஞ்சம் சீரியஸ். ஏனெனில் இந்த கண்டம், மரணத்துக்கு இணையான விளைவினை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் இருவேளைகளில் வரும் எமகண்டத்தில் சுபகாரியம் பற்றி பேசுவதைகூட தவிர்ப்பது நல்லது.திங்கள் 10.30 - 12.00 மற்றும் 3.00-4.30செவ்வாய் 9.00 - 10.30 மற்றும் 1.30 - 3.00புதன் 7.30 - 9.00 மற்றும் 12.00 - 1.30வியாழன் 6.00 - 7.30 மற்றும் 10.30 - 12.00வெள்ளி 3.00 - 4.30 மற்றும் 9.00-10.30சனி 1.30 -3.00 மற்றும் 7.30 - 9.00ஞாயிறு 12.00 - 1.30 மற்றும் 6.00 - 7.30 ஆகிய நேரங்களில் எமகண்டம் உண்டு.கரிநாளை கண்டுப்பிடிப்பது எப்படி?எல்லாம் சரியாக இருந்தாலும் கரிநாளாக இருக்கும் பட்சத்தில், அந்நாளில் சுபகாரியத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு 34 நாட்கள் கரிநாளாக அமையும். தமிழ் மாத அடிப்படையில் கரிநாள் எவை, எவையென நீங்களே கண்டுப்பிடிக்கலாம்.சித்திரையில் 6 மற்றும் 15, வைகாசியில் 7, 16 மற்றும் 17, ஆனியில் 1 மற்றும் 6, ஆடியில் 2, 10 மற்றும் 20, ஆவணியில் 2, 9 மற்றும் 28, புரட்டாசியில் 16 மற்றும் 29, ஐப்பசியில் 6 மற்றும் 20, கார்த்திகையில் 1, 10 மற்றும் 17, மார்கழியில் 6, 9 மற்றும் 11, தையில் 1, 2, 3, 11 மற்றும் 17, மாசியில் 15, 16 மற்றும் 17, பங்குனியில் 6, 5 மற்றும் 19 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும்.வேற என்னவெல்லாம் பார்க்கணும்?இங்கே சொன்னவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு சுபநாளை குறிக்க முடிந்தால் நீங்களே கிட்டத்தட்ட ஜோதிடராகி விட்டீர்கள் என்று அர்த்தம். சபாஷ், கை கொடுங்கள்.இவை தவிர்த்து, கீழ்க்கண்ட விஷயங்களை திருமண நாளுக்கு பரிசீலிக்க வேண்டும்.*ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வரக்கூடிய மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.*சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர்த்து இதர மாதங்களில் திருமணம் செய்வது அவ்வளவு ஏற்றதல்ல.*புதன், வியாழன், வெள்ளி போன்ற மூன்று கிழமைகளே சுபகாரியங்களுக்கு பிரமாதமானவை.*ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.*துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.*திருமண நாளன்று மணமக்கள் இருவரின் ராசிக்குமே சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.*மணமக்கள் பிறந்த நட்சத்திர நாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.*மணமக்களின் பிறந்த தேதியிலோ, கிழமையிலோ நிச்சயமாக திருமணம் நடக்கக்கூடாது. யுவகிருஷ்ணா