சென்னை: ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜான் கிரிகோரி விடுவிக்கப் பட்டுள்ளார். கடந்த 2017-18 சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரிகோரி (இங்கிலாந்து), முதல் தொடரிலேயே கோப்பையை வென்று முத்திரை பதித்தார். 2018-19 சீசனில் சென்னை அணி கடைசி இடம் பிடித்தாலும், நடப்பு தொடரிலும் அவரே பயிற்சியாளராக தொடர்ந்தார். தொடக்க லீக் ஆட்டங்களில் அணியால் பெரிதாக சாதிக்க முடியாததால், ராஜினாமா முடிவை அறிவித்தார் கிரிகோரி. ஆனால் அவரையே பயிற்சியாளராக தொடர அணி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு பலனும் இருந்தது.