மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் புதுசாலிய தெருவை சேர்ந்தவர் ரமணி (60). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் குத்தாலம் கடைவீதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி 20 கிலோவை வாங்கினார். சிறிது தூரம் சென்றவுடன், சைக்கிளை நிறுத்திவிட்டு அரிசி மூட்டையை அவிழ்த்து சாலைஓரத்தில் நடந்தபடியே கீழே கொட்டினார். இதைக் கண்ட ஒரு பெண், ஏன் இதை கொட்டுறீங்க என்று கேட்டதற்கு, என்னம்மா, அரிசி என்ற பெயரில் குண்டரிசி கொடுக்குறான். அதை சாப்பிட முடியுமா, சோறு வடிச்சி, மனுஷன் சாப்பிட முடியாது. ஆடு, மாடாவது திங்கட்டும் என்று கூறினார்.