சென்னை : பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன போராட்டம் நடத்தினர். சென்னையில் அண்ணாநகரிலும் பாரத் பெட்ரோலியம், தென் மண்டல அலுவலக ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.