சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைந்திட ஒத்துழையுங்கள் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தில், காகிதமில்லா சட்டமன்றம் என்னும் இலக்கை முழுஅளவில் அடையும் வகையில், இ-விதான் திட்டத்துக்கான பயிற்சி வகுப்பு நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பை சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்து பேசியதாவது:காகிதமில்லா சட்டமன்றம் என்கிற திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முனைப்புடன் நடந்து கொண்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காகிதமில்லா சட்டமன்றம் என்னும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் காகித பயன்பாடு வெகுவாக குறைக்கப்படும். இதேபோன்று, அஞ்சலக செலவு உள்ளிட்ட இதர செலவுகளும் குறைக்கப்படும். இதன்மூலம் பெரிய அளவில் சேமிப்பு ஏற்படுவதோடு வேகமாக தொடர்பு கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுக்கவும் வழிவகுக்கும்.
பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில், பேரவை நிகழ்ச்சி நிரல், வினா பட்டியல், மானிய கோரிக்கைகளின் கொள்கை விளக்க குறிப்புகள், குழு கூட்டங்கள் குறித்த குறிப்புகள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் உறுப்பினர்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைந்திட ஒத்துழையுங்கள்: சபாநாயகர் தனபால் வேண்டுகோள்
- Tanabal
- தமிழ்நாடு சட்டமன்றம்
- Tanapal
- தமிழக சட்டப்பேரவை செயலகம் காகிதமற்ற சட்டமன்றத்துடன் ஒத்துழைக்கிறது