திருமலை: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 25, 26ம் தேதிகளில் 13 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:டிசம்பர் 26ம் தேதி காலை 8.08 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கோயில் சம்பிரதாயப்படி சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது 6 மணி நேரத்திற்கு முன்னதாக கோயில் நடைகள் மூடப்படுவது வழக்கம்.