அம்பை: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலை கோவில்குளம் கடனாநதி பாலம் அருகே நூற்றாண்டுகளை கடந்த பழமையான ஆல மரம் உள்ளது. தொடர் மழை காரணமாக இன்று அதிகாலை, ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்த வழியாகதான் ஆலங்குளம், சங்கரன்கோவில், திருநெல்வேலி செல்லும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஆலமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.