மணிப்பூர் சட்டப்பேரவை வளாகத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

இம்பால்:  மணிப்பூர் சட்டப்பேரவை கட்டிடம் தலைநகர் இம்பாலில் உள்ளது. நேற்று மாலை 5.15 மணியளவில் சட்டப்பேரவை கட்டிடத்திற்கு வெளியே தங்க்மீபாண்ட் பகுதியில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடித்ததில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். 87 வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த அவர்கள் இருவரும் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  கடந்த 20 நாட்களுக்கு முன்பும் இம்பாலில் வெடிகுண்டு ெவடித்ததில் 5 போலீசார் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: