டெல்லி: நாடாளுமன்றத்தில் 26ம் தேதி நடைபெற உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்ட 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் டி.எம். காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பிக்கள் ஏகேபி சின்ராஜ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த காளியண்ண கவுண்டர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், முதல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர், 6 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர், சட்ட மேலவை எதிர்க்கட்சி துணை தலைவர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட ஜில்லா போர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து சேவையாற்றி உள்ளார்.