சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் ஒன்றில் இருந்த வீரர்கள் சிலர் மூடப்பட்டனர். இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் மற்றும் 2 உதவியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்றுருகிறது.

Related Stories: