டெல்லி: மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது; நாட்டின் கூட்டாட்சிக்கு ஆன்மாவைப் போன்றது மாநிலங்களவை. மாநிலங்களவையின் முதல் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து பேசினார். சுதந்திரமான நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது. அரசியல் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மக்களவையும் மாநிலங்களவையும் மிகவும் அவசியம் எனவும் கூறினார்.