திருவண்ணாமலை : பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2,600 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், குடும்ப அட்டைதாரின் ஒரு விருப்புரிமை தானியமாக கோதுமையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ ரேஷன் அரிசியில், 5 கிலோ குறைத்து 15 கிலோ அரிசி மற்றும் அரிசிக்கு பதில் 5 கிலோ கோதுமையை நுகர்வோர் கேட்டால் இலவசமாக வழங்கப்படும். மாதந்தோறும் அரிசி அல்லது கோதுமை எதை விரும்புகிறார்களோ அதை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.