அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்: பில்கேட்ஸ்

டெல்லி: அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக உலக பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களுள் ஒருவருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். தனது அறக்கட்டளையின் பணிகளை மதிப்பாய்வு செய்யும் விதமாக பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள ஆதார் சேவையை வெகுவாக  பாராட்டியுள்ள அவர், நிதி சேவை மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: