சென்னை: சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாறு, தி.நகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணியில் போலீசார் சோதனையில் சிக்கினர். கைதான 46 பேரிடம் இருந்து 34.75 கிலோ கஞ்சா, 12 வாகனங்கள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.