திசையன்விளை: திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான நேருஜி கலையரங்கம் முன்பு உள்ள மரண பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அசம்பாவிதம் நிகழும் முன் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திசையன்விளை மைய பகுதியில் அமைந்துள்ளது பேரூந்து நிலையம். அதன் அருகிலேயே தினசரி சந்தை மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் நேருஜி கலையரங்கம் உள்ளது. அத்துடன் ஓ.எஸ் சந்து வழியாக மெயின்பஜார் செல்லும் முக்கிய பாதையாகவும் இப்பகுதி அமைந்துள்ளது.