காட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை

காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 4 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருட்டுப்போன சிலையின் மதிப்பு ரூ.20 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: