ஓமலூர்: , ஓமலூர் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, 2ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலையில் காட்டுப்பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அங்குள்ள புதரில், 3 இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க உதவி செய்வதாக கூறி, சிறுமியை அவர்கள் தூக்கிச் சென்றனர்.
கீழே இறக்கி விடுமாறு அழுதும் விடவில்லை. போதை தலைக்கேறியிருந்த மூவரும், சிறுமியை புதர் மறைவுக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.