பந்திபோரா: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள லாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி!
- பயங்கரவாதிகள்
- ஜம்மு
- என்கவுண்டர்
- காஷ்மீர்
- பாண்டிபோரா: பாதுகாப்பு படைகள்
- இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: பாதுகாப்பு படைகள்
- பண்டிபோரா