அயோத்தியா: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் அயோத்தி மாநகரில் நேற்று மக்கள் உற்சாகமாக காணப்பட்டனர். அங்குள்ள அனுமன்கர்கி, நயா காட் ஆகிய பகுதிகளில் உள்ள ராமர் மற்றும் அனுமன் கோயில்களில் வழிபட பக்தர்கள் அதிகளவில் சென்றனர். அயோத்தி நகரில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால். எங்கு பார்த்தாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப்பின், அயோத்தி மாநகர மக்கள் நேற்று உற்சாகமாக காணப்பட்டனர். ரிகாப்கஞ்ச் பகுதியில் செய்திதாள்களை வாங்கி தீர்ப்பின் விவரங்களை படிப்பதிலும், நாட்டின் பிற பகுதி மக்கள் எப்படி உணர்கின்றனர் என்பதை பார்க்கவும் ஆர்வம் காட்டினர்.