புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம், நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. முதல் கட்டமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவஜோத் சிங் சித்து உள்பட 500 யாத்திரீகர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்ட பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய சித்து, `சிக்கந்தர் பயத்தினால் உலகை வென்றார்.