யாலா : தாய்லாந்தில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தில் வசிக்கும் மலாய் முஸ்லிம் தீவிரவாதிகள், கூடுதல் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். இந்த நாட்டின் தென்பகுதியில் உள்ள 3 மாகாணங்களில் அடிக்கடி வன்முறையும், மோதலும் நடைபெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தில் 7,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், யாலா மாகாணத்தில் உள்ள இரு சோதனை சாவடிகளை அப்பகுதி மக்கள், தன்னார்வலர்களாக பராமரித்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் அவ்வழியே வந்த முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை வழிமறித்தனர். அப்போது, தன்னார்வலர்களுடன் கிளர்ச்சியாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டனர்.