புதுடெல்லி: பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற ரூ.7,200 கோடி மோசடி தொடர்பாக, சிபிஐ 42 வழக்குகள் பதிவு செய்து நாடு முழுவதும் 190 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பாரத ஸ்ேடட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகளில்சுமார் ரூ.7,200 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கி மோசடியில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சிபிஐ தனித்தனி வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் 42 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென 190 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: