சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர் வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புக் கொண்டன. அதன்படி, இதற்கான பணிகள் முடிந்து வரும் 9ம் தேதி இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது. கர்தார்பூர் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்தார்.