புதுடெல்லி: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத்துறையின் நிதி மோசடி வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.