பெங்களூரு: ‘‘சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வருவதை மஜத விரும்பவில்லை. இதை விட மாநில மக்களின் நலன் தான் முக்கியம். எனவே, மக்களின் நலனுக்காக யாருடனும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்,’’ என முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார். பெங்களூரு பிரஸ் கிளப்பில் நேற்று பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது: கர்நாடகாவில் தற்போதுள்ள நிலையில் மாநில சட்டப்ேபரவைக்கு இடைத்தேர்தல் என்பது தேவையற்றது. மழை வெள்ள பாதிப்புகள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்்ளது.