மானை விழுங்கிய மலைப்பாம்பு

சித்தூர்: பெனுமூர் அருகே புள்ளிமானை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் கலிகிரி கொண்டாவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக நேற்று காலை ஆடு மேய்க்க சென்றவர்கள் மலைப்பாம்பு ஒன்று புள்ளிமானை விழுங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மலைப்பாம்பால் மானை முழுவதுமாக விழுங்க முடியாமல் நெளிந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் விழுங்கிய மானை கக்கியது. இதில் மான் இறந்த நிலையில் வெளியே வந்து விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மலைப்பாம்பு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பின்னர், வனத்துறையினர் இறந்த மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மலைப்பாம்பு மானை உயிருடன் விழுங்கிய சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: