சித்தூர்: பெனுமூர் அருகே புள்ளிமானை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் கலிகிரி கொண்டாவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக நேற்று காலை ஆடு மேய்க்க சென்றவர்கள் மலைப்பாம்பு ஒன்று புள்ளிமானை விழுங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மலைப்பாம்பால் மானை முழுவதுமாக விழுங்க முடியாமல் நெளிந்துக் கொண்டிருந்தது.