தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நவம்பர் ஒன்றாம் தேதி. தமிழ்நாடு நாளை  தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும். அதேநேரத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதுடன் மட்டுமே கடமை முடிந்து விட்டதாக அரசும், மக்களும் கருதிவிடக் கூடாது. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்க தமிழக அரசு உறுதியேற்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14ம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories: