சென்னை: தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நவம்பர் ஒன்றாம் தேதி. தமிழ்நாடு நாளை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும். அதேநேரத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதுடன் மட்டுமே கடமை முடிந்து விட்டதாக அரசும், மக்களும் கருதிவிடக் கூடாது. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்க தமிழக அரசு உறுதியேற்க வேண்டும்.