திருச்சி: குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததில் இருந்து மீட்பு பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற்றது என சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ் தெரிவித்தார். மேலும் மீட்பு பணிக்கு உதவிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆணையர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் சுஜித்தின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். தங்களால் இயன்ற அளவிற்கு சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் கூறியதாக தெரிவித்தனர். எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என சுஜித்தின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.