ஸுஹாய்: சீனாவில் நடைபெறும் எலைட் டிராபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி பெற்றார். அரை இறுதியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் நேற்று மோதிய சபலென்கா 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.