அகமதாபாத்: நாடாளுமன்ற மைய மண்டபத்தை புதுப்பிக்கவும், மத்திய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் குஜராத்தை சேர்ந்த ‘எச்சிபி டிசைன்’ நிறுவனம் வென்றுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபம் பழமையடைந்து விட்டதால், அதை புதுப்பிக்ககவும், மத்திய தலைமை செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டிடக்கலை மற்றும் இன்ஜினியரிங் டிசைன் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஏலம் மூலம் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.