சென்னை: கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 இடைத்தேர்தல்களிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திமுகவை பொறுத்தவரை வெற்றியால் களிபிலாடுவதும், தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையை பெற மேலும் தொடர்ந்து உழைப்போம் என தெரிவித்துள்ளார்.