தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதால், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது.