கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என அம்மாநில அரசு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு இனி அரசு வேலை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டம், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.