பழனி, திருச்செந்தூர் கோயில்களின் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுபாட்டில் உள்ள பழனி, திருச்செந்தூர் கோயில்கள் அதிக வருவாய் வரக்கூடிய கோயில்களில் முக்கியமானவை. இந்த கோயில்களில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து அந்த கோயில்களில் பணியாற்றி வந்த அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  தற்போது அவர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அசோக் டோங்ரே உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மயிலாடுதுறை இணை ஆணையராகவும், திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் குமரதுரை மதுரை மண்டல இணை ஆணையராகவும், மயிலாடுதுறை இணை ஆணையர் சிவக்குமார் சட்ட சேர்மம் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: