கடலூர்: கடலூர் அருகே விளம்பர பலகையில் இருந்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே வங்கியின் விளம்பர பலகையில் உள்ள மின்சாரம் தாக்கி தினேஷ் குமார் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அப்பகுதியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை குள்ளஞ்சாவடியில் உள்ள மருத்துவமனைக்கு மாணவர் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் வேகமாக பேருந்து வருவதை கண்டு சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுள்ளார். தொடர்ந்து குள்ளஞ்சாவடியில் உள்ள சிண்டிகேட் வங்கினுடைய விளம்பர பலகையானது சாலையின் ஓரத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள பைப்பில் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில் தவறுதலாக மின்சாரம் பாய்ந்த நிலையில், அங்கு நின்றிருந்த மாணவர் பைப்பினை தொட்டுள்ளார்.