திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பேஸ்புக்கில் பழக்கத்தை ஏற்படுத்தி தொழிலதிபரிடம் 45 லட்சம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வினில் (38, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் தனது போட்டோக்களை அவருக்கு அனுப்பினார். வினிலும் ஏராளமான போட்டோக்களை அவருக்கு அனுப்பினார். இதையடுத்து இவர்கள் இடையே நெருக்கம் அதிகமானது. இந்த நிலையில் வினிலை தொடர்புக் கொண்ட இளம்பெண், தனக்கு 45 லட்சம் தராவிட்டால் நமது பேஸ்புக்கில் உள்ள நெருக்கத்தை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று கூறினார். இதைகேட்டு பயந்த வினில் அந்த பெண் கேட்ட 45 லட்சம் பணத்தை அனுப்பினார்.