சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 3.0-ஆக பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10-23க்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சிம்லாவை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.