போடி: போடி அருகே பலாத்காரம் செய்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். 100 அடி பள்ளத்தில் கிடந்த உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலையில் மோடிமெட்டு அடுக்கு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதில் 8வது கொண்டை ஊசி வளைவிற்கு அடுத்துள்ள காத்துபாறை வளைவில் பிணம் கிடப்பதாக குரங்கணி போலீசாருக்கு ஜீப் டிரைவர் ஒருவர் நேற்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நேற்று 8வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சென்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் உடலை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் போலீசார் தீயணைப்பு வீரர்கள்,