கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. எலிவால் அருவியை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்ேபாது ‘ஆப்-சீசன்’ களை கட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த வார தொடர் விடுமுறை தற்போது வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர்.
கொடைக்கானலில் கொட்டுது மழை எலிவால் அருவியை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்: களை கட்டுகிறது ‘ஆப்-சீசன்’
- எலிவால் நீர்வீழ்ச்சி
- கொடைக்கானல்: களை கட்டிடம்
- சுற்றுலாப் பயணிகளைக் காணலாம்
- பிரகாசமான மழை, யானை நீர்வீழ்ச்சி
- கொடைக்கானல்