ஸ்ரீநகர்: பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளை காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கிய பின் கடந்த 2 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.