புதுடெல்லி: அதிக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் சப்ளை பாதிப்பு காரணமாக, வெங்காயத்தை தொடர்ந்து தக்காளியின் விலை டெல்லியில் கிலோ 80 வரை உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம், தக்காளி போன்றவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மகசூல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டெல்லியில் வெங்காயத்தின் விலை ₹80 அதிகரித்த நிலையில், மாநில அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடமாடும் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் தற்போது டெல்லியில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து கிலோ ₹60 என்கிற அளவில் விற்பனையாகி வருகிறது.