புதுடெல்லி: பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் அக்கட்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் கை ஓங்கியது. கடந்த 4-10-2016 அன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோது, அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுக்கு பதிலாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.