முசாபர்பூர்: நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி 49 முக்கிய திரை பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். திரைப்பட இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்டோர் இணைந்து இந்த கடிதத்தை எழுதியிருந்தனர்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 திரை பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு
- மோடி
- நபர்கள்
- மணிரத்தினத்தால்
- பிரபலங்களுக்கு எதிரான மணிரட்னம் தேசத்துரோக வழக்கு
- திறந்த கடிதத்தை எழுதிய அபர்ணா சென்