டெல்லி: டெல்லியில் மாலை 6.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இதனிடையே நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.