புனே: ‘‘நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல்களை விட, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது சிறப்பானது,’’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று, புனியபூஷன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல தொல்பொருள் ஆய்வாளர் ஜி.பி தெக்லுருக்கு அவர் விருதை வழங்கி கவுரவித்தார். பின்னர், வெங்கையா நாயுடு பேசியதாவது: தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதனால், நமது வீட்டு விழாக்களுக்கு கூட மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள் வருவதில்லை. நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல் என்னை கவலையடையச் செய்கிறது.