தக்கலை: திருவிதாங்கூரின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்தபோது அரண்மனையில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. தலைநகர், திருவனந்தபுரத்திற்கு மாறியதும் விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது பல காலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 29ம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் நேற்று திருவனந்தபுரம் புறப்பட்டது. இதை ஒட்டி பவனியின் முன்னே கொண்டு செல்லப்படும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது. அரண்மனை அலுவலர் அஜித்குமார் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த உடைவாளை எடுத்து கேரள தொல்லியல் துறை டைரக்டர் சோனாவிடம் கொடுத்தார். பின்னர் இதை கேரள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கடநப்பள்ளி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
நவராத்திரி விழாவில் பங்கேற்க கோலாகலமாக திருவனந்தபுரம் புறப்பட்ட சுவாமி விக்ரகங்கள்: பத்மநாபபுரத்தில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
- அமைச்சர்கள்
- சிலைகள்
- திருவிழா
- சுவாமி
- திருவனந்தபுரம்
- கேரளா
- நவராத்திரி
- பத்மநாபபுரம்
- நவராத்திரி விழா சுவாமி