சென்னை: ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நீலகண்ட் நாராயணபூர் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ‘லைகா’ நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐங்கரன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் கருணாமூர்த்தி இருந்து வருகிறார். இதனால் லைகா நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் அவர் தான் செய்து வந்தார்.
‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 120 கோடி மோசடி: பிரபல தயாரிப்பாளர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- சினிமா தயாரிப்பு நிறுவனம்
- அலுவலகம்
- பொலிஸ் ஆணையாளர்
- லெயிகா
- அலுவலக லாட்ஜ்கள்
- திரைப்பட தயாரிப்பு நிறுவனம்