தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பைபாஸ் அருகே வீருநாகம்மாள் கோயில் உள்ளது. இதன் அருகே நடுரோட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பெருமாள்(55) மற்றும் அவரது நண்பர் சேர்ந்து நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டனர். இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.