பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையத்தில் உள்ள மருநாநதி அணையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, அணை பகுதியில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையின் 72 அடி உயரமாகும். அணைக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் சுமார் 10 அடிக்கு தண்ணீரும், 20 அடிக்கு சேறும், சகதியுமாகவும் உள்ளது.