போபால்: குஜராத் மாநிலத்தில் நர்மரை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்த அணையானது அதன் முழு கொள்ளவான 138.68 மீட்டரை எட்டியுள்ளது. அணை கட்டப்பட்ட பின்னர் முழுகொள்ளளவு எட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளான இன்று சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டு பூஜை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கத்தின் தலைவர் மேத்தா பட்கர் கூறுகையில், “அணை நிரம்பி வழிந்தால் மத்தியப் பிரதேசத்தில் பகுதியாக அல்லது முழுவதுமாக 178 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அணை மதகுகளை திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.